சென்னை, நவ.30- தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் மார்டி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே. பிரபாகர் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை முதன்மைச் செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே. பிரபாகர், விருதுநகர் மாவட் டத்தை சேர்ந்தவர். திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதலமைச்ச ராக இருந்தபோது, அவரது செய லாளர்களில் ஒருவராகவும், பல் வேறு துறைகளின் முதன்மைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.